May 13th, 2008

பிளாஸ்டிக் பைகள்

அண்மையில் வீட்டில் எதற்காகவோ ஒரு பிளாஸ்டிக் கவர் ஒன்று தேவைப்பட, வீடு முழுவதும் தேடியும் ஒன்றும் அகப்படவில்லை. முதன்முதலாக தேடும் பொருளொன்று கிடைக்காமலிருந்தது மகிழ்ச்சியளித்தது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் சுற்றுசூழல் ஆர்வலர்கள் பிளாஸ்டிக் பைகளின் உபயோகிப்பை தவிர்க்கும் படி மக்களை அறிவுறுத்தத் தொடங்கினார். சரி, ஏதோ சொல்கிறார்களே, கேட்டுத்தான் பார்ப்போமே என்று நாங்களும் கடைகளுக்கு செல்லும் பொழுது வீட்டிலிருந்தே பைகளை கொண்டு செல்லத் தொடங்கினோம். சில வருடங்களாக கைவீசிக் கொண்டு போய் பழக்கப்பட்டு விட்டதால் முதலில் சற்று சிரமாக இருந்தது. போகப்போக வீட்டை விட்டு கிளம்பும் போதெல்லாம், 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலை போல பையில்லமால் போவதில்லை என்று இப்பொழுது பழகி விட்டோம். அண்மைக் காலங்களில் நான் கவனித்த வரை, சூப்பர் மார்கெட்டுகளில் குறைந்தது முப்பது சதவிதித்தினராவது reusable bags உபயோகிக்கின்றனர். கடைகளும் கிரீன் பேக், பேக் ஃபார் லைஃப் என்று அவர்கள் பங்கிற்கு உத்தம புருஷர்களாய் திரிகிறார்கள். குளோபல் வார்மிங், ஓசோன் படலத்தில் ஓட்டை, தலை விரித்தாடப்போகும் தண்ணீர் / உணவுப் பஞ்சம் என ஆளாளுக்கு பயம் காட்டிக் கொண்டிருக்கையில் ஏதோ நம்மால் இயன்ற வரை சுற்றுசூழலுக்கு இந்த பங்களிப்பையாவது அளிப்போமே.

May 7th, 2008

Madras Eye

Ever know why Conjunctivitis is called ‘Madras Eye’ back home? I don’t have a clue, but the name is so very popular that lot many people don’t know that it has got another name. Looks like it is also referred to as ‘Pink Eye’ for some reason. Back in India, when someone used to have this problem it would spread across to everyone and within no time half the town will be sporting funny looking goggles claiming that they have got ‘Madras Eye’. The reason for mentioning this one now is that my better half is suffering from the problem and sitting at home with sun glasses on, which makes Anirud give her a funny look. We are concerned that he shouldn’t catch up on that.

May 6th, 2008

நீண்ட வாரயிறுதி

இந்த திருநாட்டிற்கு வந்த புதிதில் ‘Bank Holiday Weekend’ எனப்படும் நீண்ட வாரயிறுதி வந்தாலே எங்கேயாவது பெட்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பி விடுவோம். கையில் ஒரு பைசா சேர்த்து வைக்காமல் பொறுப்பின்றி ஒரே வருடத்தில் 6 நாடுகளுக்கு போய் வந்த காலமது. சில சமயங்களில், ஒரு பயணம் ஆரம்பிக்கும் முன்னரே, அடுத்த பயணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருப்போம். எவ்வளவு சீக்கிரம் எவ்வளவு நாடுகளை பார்த்து முடிக்கப் போகிறோம் என்ற ஆர்வக் கோளாறு அதில் தெரியுமே தவிர, அந்த நாடுகளுக்கு சென்று வருவது தேவை தானா என்ற எண்ணம் தோன்றவே இராது. டிஜிட்டல் கேமரா எல்லாம் இல்லாத அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பயணத்திற்கும், கேட்க ஆளின்றி 6-7 புகைப்பட சுருள்கள் உபயோகித்து க்ளிக்கித் தள்ளுவோம். பேச்சிலர் வாழ்கையின் சுகங்களில் அதுவும் ஒன்று.

திருமணமாகி, பொறுப்பான குடும்பஸ்தனான பிறகு ஸ்காட்லாந்து, பிரான்ஸ் - இவ்விரண்டு இடங்களுக்கும் மனைவியுடன் போய் வந்ததுடன் சரி. வேறு எங்கும் செல்லவில்லை. பற்பல வங்கி விடுமுறை வாரயிறுதிகள் வந்து போய்விட்டன. இப்போதெல்லாம், நீண்ட வாரயிறுதி வந்தாலே வீட்டில் முடிக்க வேண்டிய வேலை என்ன இருக்கிறது என்று அதற்கு திட்டமிடத் தான் தோன்றுகிறது. இந்த லட்சணத்தில் நேற்று வந்த விடுமுறையில் எங்களிருவருக்கும் உடல் நிலை சரி இல்லாமல், வால் முளைக்காத பொடியனை சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது. ஐரோப்பாவில் வெனீஸ் மற்றும் சுவிச்சர்லாந்தை ஒரு முறை பார்த்துவிட வேண்டுமென்று தங்கமணியின் விருப்பம். கூடிய சீக்கிரம் நிறைவேற்றுவதாக வாக்களித்திருக்கிறேன். அலுவலக நண்பர் ஒருவர் தென் ஆப்பிரிக்கா சென்று வந்து சிங்கம்-புலி புகைப்படங்களை காண்பித்ததிலிருந்து அந்த நாட்டின் மீது எனக்கு ஒரு மையல். எதாவது ஒரு விடுமுறை மாட்டாமலா போய் விடும்? அப்போது பார்ப்போம்.

May 1st, 2008

பிறந்த நாள்

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு ஏப்ரல் மாத மாலை நேரம். பேச்சிலர் வாழ்கையில், பொழுது போகாமல் இணையத்தில் எதையோ தேடப் போக, bloggers meet என்ற வார்த்தைகள் கண்களில் சிக்கியது. இதென்ன, ஏதோ புது சமாச்சாரமா இருக்கே என்று நோண்டியதில் முதலில் தென்பட்டது kiruba.com. அங்கிருந்து சுட்டிகளை (இந்த சுட்டி, ஜட்டி கண்றாவிகளை விட லிங்க் என்பது ஆங்கில வார்த்தையாயினும் எவ்வளவோ நன்றாக உள்ளது) துரத்திக் கொண்டு போனதில் தான் வலைப்பதிவுகள் என்று ஒரு தனி உலகம் இயங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மறு நாளே Blogger-ல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து ஜோதியில் ஐக்கியமானேன். இடையில் சில காலம், நான் என்ன கிறுக்கினாலும் மானாவாரியாக பின்னூட்டமிட்டு நன்றாக ஏற்றி விட்டு வேடிக்கை பார்த்தது இந்த வலையுலகம். :-)

பல சமயங்களில் எதற்காக எழுதுகிறோம், இதை எழுதி என்ன செய்ய போகிறோம் என்று நினைக்கத் தோன்றினாலும், இந்த வலைப்பதிவுகளின் மூலமாக கிடைத்துள்ள நண்பர்களின் அறிமுகங்கள் கணக்கிலடங்கா. அது மட்டுமின்றி சிற்சில சமயங்களில் அமெரிக்க டாலரின் மாற்று மதிப்பை போல இருக்கும் மனம், ஏதாவது பின்னூட்டத்தைப் பார்த்து பூரிப்படைந்துள்ளது எவ்வளவோ முறை நடந்திருக்கிறது. பல முறை பொது இடங்களில், அறிமுகமே இல்லாத சிலர் “நீங்க தான் சக்ராவா? நான் உங்க ப்ளாக் படிக்கறதுண்டு” என்று சொல்லிய போதெல்லாம் ‘Candid Camera’ மாதிரி ஏதாவது விளையாடுகிறார்களா என்று ஜாக்கிரதை உணர்வுடன் சுற்றும் முற்றும் பார்த்தாலும், ஏற்கனவே XL சைசில் இருக்கும் ஈகோ மேலும் பெரிதாவதென்னவோ நிஜம்.

சரி, இதற்கெல்லாம் இப்போ என்ன வந்தது என்றால், என்ன எழுதுவதென்று தெரியாமல் ஒரு அச்சுபிச்சு பதிவுடன் ஆரம்பித்து இதோ இன்றுடன் ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. பெரிய சாதனை மாதிரி இதை வைத்து ஒரு பதிவு போட்டு ஜல்லி அடிப்போமே. அவ்வளவே!

April 22nd, 2008

Santosh Subramaniyam - சந்தோஷ் சுப்ரமணியம்

I read and heard from many sources that this movie titled ‘Santosh Subramaniyam’ is one of the best to have happened in the recent times. Quite a few of my friends who had seen ‘Bommarilu’ - the orginal version of this movie in Telugu went gaga about it as well. More often than not, watching a movie with such a hype takes your expectation levels sky high and this is what happened when I happened to watch ‘Santosh Subramaniyam’ yesterday.

To be honest, it is a neat family entertainer packed with good songs, decent comedy and what not. With very few exceptions, I haven’t seen many movies that places importance to the role of female character lead. ‘Santosh Subramaniyam’ is one such exception. Genelia in the lead role is very live and bubbly and it is obvious that Jeyam Ravi has found it tough to cope up with her. In fact, so powerful was Genelia’s innocent character that the role is the main strength of that movie. However, by unnecessarily overplaying certain aspects of the character is in a way irritating.

Leaving aside these drawbacks, it is certainly a nice movie to watch and one must appreciate the director for presenting a serious storyline in a light hearted way laced with humour. Certainly worth watching, at least once.

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ என்ற படத்தை நேற்று பார்க்க நேரிட்டது. பார்ப்பதற்கு முன்னர் அதனை வானளாவ புகழ்ந்த விமரிசனங்கள் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்தன.

அருமையான பாடல்கள், நல்ல நகைச்சுவையுடன், அனாவசிய குத்து பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் ஏதுமின்றி குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் என்பதில் சந்தேகமில்லை. அண்மைக் காலங்களில் வந்த திரைப்படங்களில், குறிப்பாக நான் பார்த்தவற்றில் கதாநாயகியின் பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டவை வெகு குறைவு. சந்தோஷ் சுப்பிரமணியம் அந்த குறையை நன்றாகவே போக்குகிறது. ஜெனிலியாவின் துறுதுறுப்பான நடிப்பிற்கு ஈடு கொடுப்பது ‘ஜெயம்’ ரவிக்கு பெரும் சவாலாக உள்ளது. சொல்லப் போனால், ஜெனிலியாவின் வெள்ளந்தியான பாத்திரம் தான் இந்த படத்தின் பலம். ஆனால், அதையே திரும்பத் திரும்ப, சற்று அதிகப்படியாக காட்டுவது சலிக்கிறது. நன்றாக சென்று கொண்டிருக்கும் படத்தில் தேவையில்லாமல் தொய்வை ஏற்படுத்துபவை இவை.

குறைவாகவே உள்ள குறைகளை பொருட்படுத்தாமல் படத்தைப் பார்த்தால், ஒரு சீரியசான கருவை நல்ல நகைச்சுவையோடு கொடுத்ததற்கு மூலக்கதாசிரியரையும், இயக்குனரையும் பாராட்டத்தான் வேண்டும். Certainly worth watching, at least once.

April 17th, 2008

Banana Taquito

If there is one dessert that had me craving for more in the recent times, it is the one called Banana Taquito. As a long time fan of Banofee Pie, as soon as I saw the name starting with ‘Banana’, I ordered it mistaking it to be a Banofee. Oh boy.. for once, I am glad I made the mistake. What a divine stuff that was to create such an effect on the taste buds that I didn’t care one bit about my waist line. This is what the menu describes, but let me tell you it tastes much better than what it sounds. ;-)

Banana wrapped in a cinanmon tortilla and then deep fried until golden brown. Served warm with cajeta fudge sauce and vanilla ice cream.

It so happens that I had similar surprise with a banana related dessert years ago when we had that at a Chinese Restaurant in Bournemouth. While on the topic, after dabbling with Chinese, Italian, Thai, American(?), Mexican and of course Indian, we seem to have a deep sense of liking towards Mexican. In the recent past, we have visited Chiquito and we are more than impressed with the quality of food as well as service. :)

music cd price test

April 10th, 2008

Fourth Protocol

Ever since I started commuting to work by car, my reading frequency hit the nadir as it was during my train journey to work I used to read. Last week, my other half pointed out about that and suggested to make some time to resume that habit. To make it easier, I started with a novel titled ‘Fourth Protocol’ by Fredrick Forsyth. Although it is one another ‘masala’ book, it is a very good page turner. As the plot of the story happens in Britain, it was all the more interesting and I managed to finish the book with in a week. Now, I have picked up John Grisham’s ‘The Street Lawyer’. Should see how it goes.

btw, it is two years since I got my driving licence in UK after lot of struggle. I am glad to be out of the probation period. Phew.. what a relief!

March 7th, 2008

மீண்டும் சுஜாதா பற்றி…

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்
மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

சுஜாதா அவர்களின் உயிர் பிரியும் தறுவாயில் மேற்கண்ட பாசுரத்தை தான் நண்பர் தேசிகன் அவரருகிலிருந்து படித்துக்கொண்டிருந்தாராம். சுஜாதாவின் படத்தை அட்டையில் தாங்கி இன்று வெளி வந்திருக்கும் ஆனந்த விகடனில் தேசிகனின் கட்டுரையை படித்துப் பாருங்கள். தேசிகனின் கட்டுரை மட்டுமன்றி நிஜ சுஜாதாவின் பேட்டியும்(?), சுஜாதாவின் கடைசி குறிப்புகளும் அதில் உள்ளன. காலையிலிருந்து நான்கு, ஐந்து முறை படித்துவிட்டேன். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் கண்களில் கண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம் - இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதை சுஜாதா படித்திருந்தால் நிச்சயம் காறித் துப்பியிருப்பார். Good bye வாத்யாரே!

March 4th, 2008

Flixster

Couple of days back I got a mail from my friend inviting me for a quiz. I clicked the link inside the mail and there was a ‘Colour Blindness Test’ that took upon. Once I completed that, I was asked to register by which time I would normally close the browser. But, 99% of the registration form was already filled in and hence I decided to complete the remaining 1% and as fate would have it, hit the ’submit’ button. That stupid site grabbed all the e-mail addresses in my address book and sent out mails like the one I received. To save some embarrassment, that particular e-mail account of mine did not have that many addresses in the address book. The site in question that does this wonderful job is Flixster.com. Just in case if you receive a mail from me or from anyone else containing links to the above site, I am sure you know what to do.

February 28th, 2008

சுஜாதா

சரியாக 16 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை காமராஜர் அரங்கத்தில் விகடன் விழா நடைபெற்றுக் கொண்டிருக்க, முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டிருந்த எழுத்தாளர் சுஜாதாவிடம் மட்டும் ஈ மொய்ப்பது போல பெருங்கூட்டம். அன்று அரங்க வாயிலில் வாங்கிய அவரது ‘ஏன், எதற்கு, எப்படி?’ புத்தகத்தை அவர் முகத்தின் முன்பு நீட்டி “சார், ஏன் எதற்கு எப்படி என்று கேட்காமல் ஒரு ஆட்டோகிராப்” என சொல்ல நிமிர்ந்து சில நொடிகள் பார்த்தவர் “நிறைய கேளுங்கள் கேள்விகளாக!!” என கையெழுத்திட்டு கொடுத்தார். இன்னொரு சிறிய புத்தகத்தையும் நீட்டி “சார் சார்.. அப்படியே இதுலையும் ஒன்னு. நான் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்டூடண்ட்” என்று அறிமுகப்படுத்திக் கொள்ள “Learn C” என்ற அறிவுரையுடன் ஒரு கையெழுத்து கிடைத்தது.

இது நடந்து இரண்டாண்டுகளுக்கு பின்னர் நாங்கள் ஸ்ரீரங்கத்திற்கு குடி பெயர்ந்ததும், அங்கு அவர் வாழ்ந்து, படித்து, விளையாடி, எழுதிய இடங்களை கண்ட பொழுது புல்லரித்தது என்பது சற்றும் மிகையல்ல.

ஸ்ரீரங்கத்து தேவதைகளாகட்டும், அவரது சிறுகதைகளாகட்டும், கணேஷ்-வசந்த்தின் துப்பறியும் லீலைகளாகட்டும் அவரது படைப்புகள் படித்தவர்களின் மத்தியில் ஒரு சிறு பாதிப்பையாவது உண்டாக்கின. இப்படிப்பட்ட அந்த மனிதரின் மறைவை பற்றிய செய்தி குறுந்தகவலாக வந்து சேர்ந்ததிலிருந்து மனம் மிகவும் கனக்கிறது. வேறேதும் சொல்லத் தோன்றவில்லை. கற்றதையும் பெற்றதையும், மெக்சிகோ சலவைக்காரி பற்றியும் இனி யார் நமக்கெல்லாம் வாஞ்சையோடு சொல்லப் போகிறார்கள்?